search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை போராட்டம்"

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயிற்றுனர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாப்பிடாமல் இருந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் சோர்வடைந்தனர். 4 பேர் மயக்கம் அடைந்தனர்.

    சென்னை:

    தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயிற்றுனர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சாப்பிடாமல் இருந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் சோர்வடைந்தனர். 4 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    போராட்டம் குறித்து பயிற்றுனர்கள் கூறியதாவது:-

    அரசு, உதவிபெறும் மாற்றுத்திறனாளி பயிற்றுனர்களாகிய நாங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுனர்களாக பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு 1,600 ஆசிரியர்கள் மட்டுமே கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கடந்த ஆட்சியிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டவர். அவர் எங்கள் நிலையை அறிந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    18 மாதமாக அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து விளக்கி வருகிறோம். ஆனால் இதுவரையில் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகம் முழுவதும் 9 இடங்களில் ரெயில்வே அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சென்னையில் ரெயில்வே பொது மேலாளர் (டி.ஆர்.எம்) அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்சல், என்.சி.ஓ.பி.சி. பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பெரம்பூர்:

    தெற்கு ரெயில்வே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டாக்டர் ஆர். அப்சல் தலைமையில் தமிழகம் முழுவதும் 9 இடங்களில் ரெயில்வே அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ரெயில்வே பொது மேலாளர் (டி.ஆர்.எம்) அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்சல், என்.சி.ஓ.பி.சி. பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். ரெயில்வே தொழிலாளர்களுக்கு ஓபிசி சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவர்களது சேவை பதிவு புத்தகத்தில் ஓ. பி. சி. என குறிப்பிட வேண்டும். ஓ.பி.சி.க்கு வரவேண்டிய பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    ஓ. பி. சி. ரோஸ்டர் முறையை உடனே அமுல்படுத்தி வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னையில் கோட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையிலும், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் நுழைவாயிலில் பி. திருகுமரன் தலைமையிலும், கூடுதல் கோட்டம் ஆர். ஏழுமலை, ஹென்ட்ரி ஜான் ஆகியோர் தலைமையிலும், பெரம்பூர் லோகோ பணிமனையில் வின் அரசு, மதுரையில் செல்வகுமார் , பாலக்காட்டில் ஹரிதாஸ், சேலத்தில் சௌந்தர பாண்டியன், போத்தனூரில் லட்சுமி நாராயணன், பொன்மலையில் கோபி, திருவனந்தபுரத்தில் பேராட்சி செல்வன், திருச்சியில் பாலசுப்பிரமணியம், அரக்கோணத்தில் குப்பன், ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்ட ஆலோசகர் பாரதிதாசன் தலைவர் முகமது சுல்தான், பொருளாளர் ஆர்.செந்தில்குமார், ஜெய்சங்கர் பழனி வினோத் ஜவகர், சீனிவாச ராவ், மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×